Friday 3rd of May 2024 01:01:11 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐ.தே.க. தயார்! - ரணில் எம்.பி. அறிவிப்பு!

ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐ.தே.க. தயார்! - ரணில் எம்.பி. அறிவிப்பு!


இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பழைய ஐக்கிய தேசியக் கட்சி இப்போது இல்லை என்றும், இன்று புதியதோர் ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியை மீளக்கட்டியெழுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், இளைஞர்கள் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE